எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Monday, November 01, 2004

கார்மேக வலம் - 1

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவில் சிங்கையிலிருந்து பிரபு பெயர்த்த "மூளையும் மனமும் " என்கிற தமிழாக்க கட்டுரை என்னை கவர்ந்தது. "ஆன்மீக அனுபவம் வெளியிருந்து அல்ல உள்ளிருந்தே உருவாகிறது. உதாரணத்திற்கு, தியானத்தில் ஏற்படும் உலகத்தைக் கடந்த அனுபவம் மூளையின் குறிப்பிட்ட இடங்களில் ஏற்படும் ரத்த ஒட்ட மாறுதல்களின் விளைவே!!" என்கிறது அவர் குறிப்பிடும் புத்தகம்:-

Why God Wont Go Away
Authors: Andrew Newberg, Eugene D'Aquili, Vince Rause
Published by: The Ballantine Publishing Group
ISBN: 0-345-44034-X

விரிவான வாசிப்பிற்கு காத்திருக்கிறேன்.

கோமான் கலக்குகிறார்!. ஒரு பக்கம் அவர் தாத்தா எழுதிய அருமையான இலக்கிய திரட்டுகளை அள்ளித்தருகிறார்."விரகம் விளைத்த வீரத்தில்" காரிருள், மல்லிகை, வெண்ணிலா, கருங்கடல் இவையாவும் ஒருங்கிணைந்து ராமனின் பிரிவாற்றாமையை எப்படி தூண்டியது என்று அழுகு மிளிர விளக்கி, அவன் இன்னுயிரான சீதையை கொண்டு வர பெருந்தடையாய் இருக்கும் கடலை கடக்கும் எண்ணத்தில் மூழ்கும் கம்பரசத்தை கோமானின் தாத்தா மிக அழகிய நடையால் விளக்குகிறார். "நம் உள்ளத்தை உணர்ச்சி வசமாக்கும் பணியை கோமான் ஐயாவாலும் செயல்படுத்த முடியும்...". திவ்விய பிரபந்தத்தில் வெண்பா வகைகளின் அறிமுகமும் ஆழ்வார்கள் அறிமுகமும் பெரியாழ்வார் பாடிய தலங்கள் அறிமுகமும் அருமை.


குழந்தைகள் அவரை நிறையத் தொல்லை கொடுக்கிறார்களோ எனத் தெரியவில்லை :-) , அவர் கவிதையில் ஒன்று:-

"அமைதியின் இருப்பிடம்
குழந்தைகளிடத்தில்

ஆம்
அமைதியின் இருப்பிடம்
குழந்தைகளிடத்தில் தான்

தூங்கும் பொழுது......."

ஆனால் விசாலமான சமூக பார்வையுடன் குளிர்பானத்தின் நச்சுத்தன்மை, தணிக்கை, காலச்சுவடின் தனிஎழுத்தாளர் தாக்கு என்பன குறித்தும் எழுதுகிறார்.

தன் எண்ணத்தையும், எழுத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்ள வித்தியாசமான முன்னோட்டத்துடன் வந்திருக்கிறார் விசிதா.
" வரும் வியாழன் இரவு அல்லது வெள்ளி காலை ஒரு சிறுகதையை இவ்வலைப்பதிவில் இடுகிறேன். ஒரு மாறுபட்ட காதல் கதை என்று அதைச் சொல்லாம். ஆனால் அதை படித்தபின் அது காதல் கதை மட்டும்தான் என்று நீங்கள் சொல்லமாட்டீர்கள் "
ஆவலை கிளப்பி விட்டுள்ளார், பார்ப்போம், படிப்போம்!

மாவுருண்டை [இட்லிவடைப் போல வித்தியாசமான முகமூடிதான் :-) ] வண்ண வண்ண படங்களுடன் சுட்டும் சுடாமலும் விசயங்கள் தரத் தொடங்கியிருக்கிறார். அவருடைய மகாகவி (அல்லது) வீரப்பன் HALLOWEEN புகைப்படம் அருமை.

[வலம் தொடரும்..]

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home