எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Wednesday, October 20, 2004

ஒரு மகளின் குரல்

"அப்பாவுக்கு என்னை ரொம்ப புடிக்கும்னு அம்மா சொல்லியிருக்கு. நான் ரொம்பச் சின்ன வயசில இருக்கும்போது வந்து பார்த்திருக்கிறாராம். "மகாலச்சுமியாட்டம் இருக்கா"னுச் சொல்லி சந்தோசமா போனாராம்.

அப்பாவை நான் போட்டோவில்தான் பார்த்திருக்கேன். பாவம் அவர் கண்ணெல்லாம் குழி விழுந்து(புறை விழுந்துச்சுனு சொல்றாங்க) ரொம்பவே மாறிப் போய்ட்டார்.

அவர் ஏன் மத்தவங்கள கொன்னார்? அவரை ஏன் கொன்னாங்க? எதுவும் புரியல. ஆனா, தெரிஞ்சுப்பேன். அம்மா கிட்டே கேட்ட எப்பவும் அழுதுக்கிட்டு போய்டுவாங்க. ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. வேற யார்கிட்ட கேட்கனும்னு புரியல.

நான் நல்லா படிப்பேன் சார். எங்க டிச்சரை வேணும்னா கேட்டுப் பாருங்க. என்னை இந்த ஸ்கூலே விட்டு அனுப்பாதீங்க சார். எங்க அப்பா செஞ்ச தப்புக்கு என்னை ஏன் தண்டிக்கிறீங்க சார் ?

இதுவரைக்கும் யாருக்கும் தெரியாம எப்படி படிச்சுக்கிட்டு இருந்தேனோ அப்படியே இருக்க விடுங்க சார்.

என் ஆசையெல்லாம் நல்லா படிச்சு என் அம்மாவை நல்ல படியா பார்த்துக்கணும்னுதான். "


அவள் கனவினை கலைத்து விடாதீர்கள் !

பி.கு:- இது ஒரு கற்பனைக் குரல்.

2 Comments:

நிஜ "கற்பனைக் குரல்"

Wednesday, October 20, 2004 2:51:00 PM  

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20041020133058&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

ஆதரவு குரல் விட்ட பள்ளி முதல்வருக்கு நன்றி!

Wednesday, October 20, 2004 3:42:00 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home