எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Wednesday, October 20, 2004

சிறுவனும் பட்டமும்

" வானத்தின் உயரத்தில் ஒரு பட்டம் பறந்துக் கொண்டிருந்தது.கீழேயிருந்து ஒரு சிறுவன் மிக ஆவலுடன் அந்த பட்டத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். பட்டம் உயர உயரப் பறந்தது. சிறுவனுக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி.

அப்போது பட்டத்தின் அருகே ஒரு கிளி பறந்து வந்தது. கிளி பட்டத்தைப் பார்த்து," எப்படி இவ்ளோ அழகாக சேர்வில்லாமல் உசரமாய் பறக்கிறாய்? ரொம்ப பொறாமையாக இருக்கிறது உன்னைப் பார்த்து!"என்றது. அதற்கு பட்டம், "ப்பூ....இதென்ன பிரமாதம்!. அதோ தெரிகிறானே அந்த சிறுவன், அவன் மட்டும் அந்த சரடை விட்டு விட்டால், நான் மேலும் சுதந்திரமாக மேலே மேலே பறப்பேன். அவன் கட்டுப்பாடுதான் என்னை தளர்த்துகிறது."

கிளி உடன்," நான் அந்த சரடைக் கொத்தி அறுத்து தருகிறேன். நீ உயரே பற" என்றது. பட்டமும் மிக்க மகிழ்ச்சியுடன் வாலை அசைத்தது.கிளி அச்சிறுவன் பிடித்திருந்த சரடை அறுத்து விட்டது. அதுவரை சிறுவனின் கட்டுப்பாட்டில் உயர உயர எழும்பிய பட்டம் நிலை தடுமாறி காற்றால் அலைக்கழிக்கப் பட்டு கீழே வேகமாக வந்து மழைக்காலச் செம்மண் சாலையின் சேற்றில் வீழ்ந்தது. அதைக் கண்ட அந்த சிறுவன் மனம் தாளமாட்டாமல் தேம்பித்தேம்பி அழுதான்.

குழந்தைகளே! அந்த பட்டம்தான் நீங்கள்!. கீழேயிருந்து உங்களை உயர உயர ஏற்றி விட்டு மகிழ்ச்சி கொள்ளும் சிறுவந்தான் உங்கள் ஆசிரியராகிய நான்!. உங்களைப் பிணைத்திருக்கும் சரடு என்னும் கட்டுப்பாடு என்றுமே உங்கள் உயர்வுக்குத்தான் வழி வகுக்கும். ஆனால், அந்த மெல்லிய காட்டுப்பாட்டின் கனம் கருதி நீங்கள் அதை அறுத்து என்னை விட்டு விலகிச் சென்றால் அதனால் உங்களுக்கு வரும் துன்பங்களைக் கண்டு கண்ணீர் உகுக்கும் முதல் ஜீவன் உங்கள் அன்பிற்குரிய ஆசிரியன் நாந்தான். எனவே, என்னையும் சிறுச்சிறு கட்டுப்பாட்டையும் என்றுமே உதறிச் செல்லாதீர்!".


இது "தனியாவர்த்தனம்" என்னும் மலையாளத்திரைப்படத்தில் ஆசிரியராய் வரும் மம்முட்டி அவர் மாணக்கர்களுக்கு கூறும் அறிவுரை. பிரபல திரைக்கதாசிரியர் லோகிததாஸ் [ ஆமாம்....அவரேதான்...தற்போது மீரா ஜாஸ்மினுடன் கிசுகிசுக்கப் படும் "GODFATHER" ] எழுதியது. ஜீனியர் விகடனில் இந்தச் செய்தியை படித்ததும் சட்டெனத் நினைவில் வந்தது.


வீசும் காற்றின் சாரமறிந்து அளவான கண்டிப்புடன் எனக்கு அறிவு புகட்டி வானின் உயரே உயரே ஏற்றி விட்ட நல்லாசிரியர்/யை-கள் அனைவரையும் நினைத்துப் பார்த்து நன்றி நவில்கிறேன்!!.


2 Comments:

kulanthaikalukku solli kodukka ugantha nalla kathai.

Wednesday, October 20, 2004 10:52:00 PM  

சேற்றில் விழுந்த மற்றுமொரு பட்டம் : http://www.hindu.com/2004/10/22/stories/2004102209500100.htm

Thursday, October 21, 2004 9:20:00 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home