எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Thursday, November 18, 2004

வாடிக்கையாளர்களா தெய்வங்கள் ?

மதிய உணவிற்கான காசை சொலுத்துவதற்கு அலுவலக உணவு விடுதியின் வரிசையில் நிற்கும்போது இன்று நான் கண்டது. ஒரு பெண்மணி கையில் உள்ள தட்டில் சில இலை தழைகளுடன் காசு வாங்கி கல்லா நிரப்ப காத்திருக்கும் பெண்ணிடம் சென்று, "கொஞ்ச நேரத்திற்கு முன் நான் இங்கிருந்து சாலட் [இலை, தழை,பழம்,மூட்டை இன்ன பிற] வாங்கி சென்றேன். வெளியில் அடித்த நல்ல காற்றில் அவை யாவும் பறந்து போய் விட்டன. மறுபடியும் எனக்கு வேண்டிய இலை தழைகளை நான் எடுத்து கொள்ளலாமா? " வினவினாள். அதாவது, காசு கொடுக்காமல்.

அந்த "கல்லா" பெண், கண் மூடி நெற்றி தேய்த்து சில விநாடிகள் மட்டுமே யோசித்து,"எடுத்து கொள்ளுங்கள் அம்மையாரே. நல்ல மதிய உணவு உரித்தாகுக!" என்றாள்.வெளியே காற்று வீசி உணவு பறந்து போனதிற்கு எந்த விதத்திலும் பொறுப்பாகாத அந்த உணவு விடுதியின் ஊழியை, மீண்டும் உணவு வழங்க மறுத்தால் எங்கே அந்த வாடிக்கையாளியை இழந்து விடுவோமோ என சமயோசிதமாக யோசித்து செயல்பட்டாள். "சைபராபத்"தில் " காமத்" உணவு விடுதியில் தீய்ந்து போன தோசையை மாற்றி தரச் சொல்லி அரை மணி நேரம் சண்டை போட்டது அந்த சமயத்தில் நினைவுக்கு வந்து தொலைத்தது.


எனக்கென்னவோ உணவை தவறவிட்ட பெண் செய்தது சரியாகவே படவில்லை, "கேட்டு தான் பார்ப்போமே...சும்மா கிடைத்தால் சுகம் தான்" என்பது போல விடுதியின் வாடிக்கையாளச் சேவையை தனக்கு சாதகமாய் பயன் படுத்தி கொண்டது கேவலமாக இருந்தது.

"Starbucks" என்ற புகழ் பெற்ற காப்பி கடையில் ஒரு முறை "Mocha"வில் "Whipped-Cream" போடாமல் தரச்சொல்லி காத்திருந்தேன். தயாரானதும் நான் கேட்ட காப்பியின் பெயர் சொல்லி அழைத்தார்கள். சென்று எடுத்து குடித்த பின் தான் தெரிந்தது, அதில் "Cream" இருக்கும் விசயம். என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தவர் நான் எடுப்பதையும் குடிப்பதையும் பார்த்து கொண்டிருந்தாரே தவிர ஒன்றும் சொல்லவில்லை. மறுபடியும் நான் கேட்ட காப்பியின் பெயர் சொல்லி அழைத்த பின் தான் நான் செய்த தவறு புரிந்தது.

என் பக்கத்தில் நின்றிருந்தவர் "Cream" முடன் கேட்டிருக்கிறார். அவருடைய காப்பியை அவசரப்பட்டு எடுத்து நான் குடித்தே விட்டேன். என்ன செய்வதென தெரியாமல் அசடு வழிய நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டேன். நிலைமையை சட்டென புரிந்து கொண்ட காப்பி செய்து தரும் இளைஞன், எங்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டு, கணப்போழுதில் அவருக்கு "Cream"முடன் கூடிய இன்னொரு காப்பியை செய்து கொடுத்து விட்டான்.

வேண்டாம் வேண்டாம் என நான் சொல்லச் சொல்ல "Cream" போடாத அந்த காப்பியை என் கையில் திணித்து நான் எச்சில் படுத்திய காப்பியின் கோப்பையை " இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கட்டும் " என வாழ்த்திக் கொண்டே எடுத்து சென்று விட்டான்.என்னதான் என்னையும் அவரையும் மன நிறைவு கொள்ள அந்த இளைஞன் அப்படி செய்தாலும் காப்பி குடிக்கையில் என் தவறு மனதில் கசந்து கொண்டேயிருந்தது.

சேவையை தவறாக உபயோகித்து கொள்ளும் வாடிக்கையாளர்களா தெய்வங்கள் ?


2 Comments:

I don't find anything wrong in both cases when considering there are people who buy stuff and use it and return it right before the 30day return policy ( I know few of them). That is what completely unacceptable. As a buiness owner I would always want to see the customer satisfied.

Friday, December 10, 2004 8:33:00 AM  

I can accept the starbucks story, and there is nothing wrong in that. Its his fault, he should have given the product inorder else he should have said to you what it is before giving it to you. I cannot accept the second one. In some or most of the places the manager is resposible as a whole for all the mishaps, if it exceeds they get reflected in their Salary some times(I know this as one of my friend is a manager is TGIF).
Also if I am in a resturant I will never send the food back(might be cause of the effect of the movie "Road Trip" :-))

Tuesday, June 21, 2005 3:20:00 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home