எழுத்துப்பட்டறை

எழு, எழுத்தால் உழு.

Friday, November 05, 2004

அஜீத்தின் "அட்டகாசம்"

இன்று "தலை"க்கு மேல் இருக்கும் வேலைக்கிடையில் நம்ம "தல"யின் தீபாவளிக்கு திரைக்கு வரும் "அட்டகாசம்" படப்பாடல்கள் கேட்டேன். சுத்தம்.. ஒன்று கூட தேரவில்லை. பரத்வாஜ் அருமையாக சொதப்பியிருக்கிறார். எழுத வந்தது இசையைப் பற்றியல்ல. பாடல்களைப் பற்றி.

கருத்தாழமிக்க பாடல்கள்.படத்தின் கதைக்கு எவ்வளவு தூரம் பொருத்தமாக எழுதப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால், "தல"யை குஷி(ழி)ப்படுத்த எழுதப்பட்டதாகவே தெரிகிறது.

"தல போல வருமா" என்னும் பாடலில், " தலையுள்ள பயல்கள் எல்லாம் தலயல்ல" என்னும் அரிய தத்துவம் வருகிறது. அதைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டது ஐயா!.

"உனக்கென்ன..உனக்கென்ன " என வரும் பாடல் "தல"யின் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு தீபாவளி சரவெடி. சந்தேகமிருந்தால் நீங்களே படித்து பாருங்கள். தமிழ் திரைப்பட சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய "முத்துக்கள்" அவை:-

"இமய மலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன?
ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்ன?
எரிந்து போன சாம்பலிலிருந்து
எழுந்து பறக்கும் பீனிக்ஸ் போல
மீண்டும் மீண்டும் பறப்பேன் உனக்கென்ன?
நான் வாழ்ந்தால் உனக்கென்ன?

உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன உனக்கென்ன
உனக்கென்ன தம்பி உனக்கென்ன?

ஏற்றி விடவோ தந்தையுமில்லை
ஏந்திக் கொள்ள தாய் மடியில்லை
என்னை நானே சிகரத்தில் வைத்தேன் அதனால் உனக்கென்ன ?


வெற்றி என்பது பட்டாம் பூச்சி
மாற்றி மாற்றி மலர்களில் அமரும்
உனக்கு மட்டும் நிரந்தரம் என நினைத்தால் சரியல்ல


எனக்கொரு நண்பன் என்று அமைவதற்கு
தனிப்பட்ட தகுதிகள் எதுவுமில்லை.
எனக்கொரு எதிரியாய் இருப்பதற்கு

உனக்கொரு உனக்கொரு தகுதியில்லை.

நீயென்ன உருகும் பனிமலை
நாந்தானே எரிமலை எரிமலை.."

இது எந்த "திருமலை"யையும் நோக்கி சாவல் விட்டு பாடப்பட்டதல்ல என உறுதியாக நம்புவோம். ஆனால் இதைக்கேட்டு யாரும் "திருப்பாச்சி" அருவாளுடன் "அட்டகாசம் " செய்யாமலிருந்தால் போதும்.

என் "தல" [ அதாம்பா...மேனேஜர்..] வந்து முறைத்து விட்டு போகிறார்....யாரு "தல"ய யாரு சீவின "எனக்கென்ன ..எனக்கென்ன...", "வேல"ய பாத்துட்டு வெள்ளிக்கிழமையும் அதுவுமா சீக்கிரம் வீடு போய் சேருவோம்.

"தல"யின் அடிப்பொடிகள் யாரும் "ஆட்டோ" அனுப்பாமலிருந்தால் சரி...;-)

4 Comments:

saar/thaaye

kalakitteenga...intha nakkal kalanthe thoni..superunge..

thavalai than vaayaal kedum enbathu pol ajith romba overraa kural udaraaru...kooda intha vijay vera..

onnum solla mudiyaathu..intha kooru ketta thamizhan naalaikku ivenga rendu perla oruthana CM aakiduvaanunge...

mella thamizh ini saagum intha cinema vi naal....nalla ezuthunge..

neenga aanaa pennaa..
ponnunnu naan sathiyama nambamaataen....
nambamudiyavillai..villai..illai..lai..i..

aduthu unga IP vacchi..neenga engirunthu valaikul vareengannu kandupudikaraen...nanbar moorthi enperil kobamaaga ullaar..

Friday, November 05, 2004 8:34:00 PM  

if u have money to make a film and if u act as the heroine u can get vairamuthu to write a song in praise of you.he is that cheap, pun intended.

Saturday, November 06, 2004 10:03:00 AM  

This comment has been removed by a blog administrator.

Sunday, November 07, 2004 12:21:00 PM  

பாட்டை ரசித்து, வேதனையைப் பகிர்ந்து கொண்டதற்கு தாங்ஸுங்க ;-)

Monday, November 08, 2004 6:58:00 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home