எழு, எழுத்தால் உழு.
வலைமேகங்களிடம் வேண்டுவன
- வலைப்பதிவுகளின் அடுத்த சாத்தியகூறுகள் என சிலவற்றை நண்பர்கள் வலைமேடையில் பகிர்ந்துள்ளார்கள். வலை மேடையில் நிறைய விவாதங்கள் எழுதப்பட வேண்டும்[ கடந்த ஒரு மாதத்தில் ஒன்றுதான் பதிக்கப்பட்டிருக்கிறது]. அறிவுபூர்வமான விவாதங்கள் நிச்சயம் ஆக்க பூர்வமான பாதையில் வலைப்பதிவுகளை கொண்டுச் செல்லும்.
- குரல் பதிவுகளும் நிறைய வெளியிடப்பட வேண்டும்."அகரதூரிகை" அருணும் , கிருபாசங்கரும் சிலவற்றை பதிந்திருந்தனர். முக்கியமாக வலையுலக கவிஞர்களும் கதைஞர்களும் தம் படைப்புகளை குரல் மூலம் பதிவது நன்றாய் இருக்கும்.
- தமிழக(இந்திய) அரசியலும் அமெரிக்க அரசியலும் பற்றிய பதிவுகள் தான் அதிகம் எழுதப்படுகின்றன. உலக அரசியலை பற்றியும் நிறைய பதிவுகள் கருத்துச் சொறிவுடன் எழுதப் படவேண்டும் [ வளைகுடா நாடுகளின் உள் நாட்டு கலவரங்கள் - போர் பற்றி எழுதலாம். எ.கா: இஸ்ரேல்- பாலாஸ்தீன பிரச்சினை. பத்ரியும் ரவி ஸ்ரிநிவாஸும் இவற்றை அவ்வப்போது தொட்டுச் சென்றுள்ளார்கள்].
- அண்மையில் தமிழ் பாம்பு எழுதிய சிறுகதை நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்தது. இது போல நிறைய பரிசோதனை முயற்சிகளுடன் கதைகள் வலைப்பதிவுலகில் நிறைய எழுதப்பட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home